Friday, May 14, 2010
கள்ளக்காதல்
ராஜூ ஆர்வமாய் அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான். "தம்பி அந்த ராமசாமியோட சேர்ந்து உன் தம்பி கஞ்சா கடத்தி போலீஸ்ல மாட்டிக்கிட்டான்பா, நம்ம குடும்பத்தோட கௌரவத்தையே கெடுத்துட்டான்" என்று சொன்ன தந்தையை நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் புத்தகத்தை தொடர்ந்தான். "உன் தங்கச்சி அந்த ரவுடி பயல தான் கட்டிக்குவேன்னு ஒத்தக்காலுல நிக்கிராப்பா, அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவனாம், அவளுக்கு நீ தான் நல்ல புத்திமதி சொல்லணும்" என்ற அன்னையை சற்று எரிச்சலோடு பார்த்துவிட்டு புத்தகத்தில் மூழ்கினான். "டேய் உன் பொண்டாட்டிய அவளோட மேனேஜர்கூட சினிமா தியேட்டர்ல பார்த்தேன், அவள கண்டிக்க சொன்னதுக்கு என்கூட அன்னிக்கி சண்ட போட்டியே இப்போ என்ன செய்ய போற" என்று அக்கா சொன்னதும் புத்தகத்தை தூக்கி எரிந்து விட்டு டிவியை அணைத்துவிட்டு "இனிமேல் இந்த மாதிரி கள்ளக்காதல் சீரியல் எல்லாம் பார்க்காதீங்க"னு வெளியே கிளம்பிச்சென்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
En ippudi?
ReplyDeleteசேரல் - poluthu pogalaye thala , athaan
ReplyDelete