Sunday, October 23, 2011

என் இனிய மகளே

யாருமில்லாப் பின்னிரவில்
என் தனிமையை தின்று கொண்டிருந்த அறையில்
இன்று உன் ஸ்பரிசமே எங்கும் விரவியுள்ளது

விரக்தியைத் தேடும் என் தனிமையை
உன் அணைப்பு விரட்டுகிறது

வறண்ட பாலையாய் இருண்டு கிடக்கும் வாழ்க்கையை
உன் இதழ் முத்தத்தினால் துளிர்க்கச்செய்தாய்

திக்குத்தெரியாமல் கிடந்த என் வாழ்க்கைக்குள்
வந்தாய் வழிகாட்டியாய்

எப்பெரும் துன்பமும் இடரும்
உன் சிறு புன்னகையில் சிக்கிச் சிதறிப்போனது

உன் பிஞ்சு விரலை பிடித்து நடைபயிலையிலே
என் தந்தையை இன்னும் அதிகம் நேசிக்கச் செய்கிறாய்

இனி வாழும் நாட்கள் யாவும் உனக்காகவே இன்றி
எனக்காக அல்ல என் இனிய(யா) மகளே