Thursday, November 29, 2012

தடம்


தெளிந்த நீரோடையாக இருந்த மனதில்
ஆழமாய் தடம் பதித்து
அதிர்வலைகளைக் கொடுத்தாய்
அலைகள் நின்ற பின்பும் தடம் மட்டும்
மீதம் உள்ளது நிரந்தரமாய்
அழிக்கவும் முடியவில்லை
அதற்கு மனம் வரவுமில்லை
தடத்தை எண்ணி கழிக்கிறேன் நிஜத்தை

மாறும் உலகங்கள்

நீதான் என் உயிர் நன்பன் என்னுலகில் முதல்வன் நீமட்டுமே என்ற தோழியின் உலகில் நான் என்னவாக இருப்பேன், துரோகத்தை மட்டுமே விட்டுச்சென்ற அவள் இன்று என்னுலகில் இல்லை நீ என்னை காதலிக்க வேண்டாம் எனது காதலையும் ஏற்கவேண்டாம் உன் நட்பு மட்டும் போதும் அதுமட்டுமே என் உலகம் என்று கூறியவள் கொடுத்தது அவப்பெயரை மட்டுமே நீ கேட்டால் என்னுயிரையும் தருவேன் உலகில் எங்கிருந்தாலும் உனக்காக வருவேன் எ ன்ற நண்பன் எங்கிருக்கிறான் என்ற தகவல் கூட இல்லை. தொடர்புகொண்டாலும் என்னுடன் படித்தவன் தானே நன்றாக இருக்கிறாயா என்ற விசாரிப்பு மட்டுமே கிடைத்தது நாட்பை சொல்லி சொல்லியே என் காசில் குடித்து விட்டு வேறொரு உலகம் தேடிச்சென்றான் இன்னொருவன் ஒருகாலத்தில் சிலரின் உலகமாக இருந்த நாம் இப்பொழுது அவர்கள் உலகில் யாரோ ஒருவராக அல்லது இல்லாமல் கூட இருக்கிறோம் இருந்தும் தொடர்புகள் குறைத்தால் கூட இன்றும் என்னைப்பற்றி நினைக்கும், உடன் படித்தவர்கள் என்னிடம் பேசுவதற்கு கூட யோசித்த நிலையில் என்னை ஆதரித்து அரவணைத்த என் கல்லூரிஅறை நண்பர்களின் உலகங்களில் கல்லூரியில் மட்டுமல்ல சென்னையில் என்னுடனே இருந்த இப்பொழுதுகூட மதுரை வந்தால் என்னைப் பார்க்க ஓடி வரும் நண்பனின் உலகிலும் என் காதலை சொந்தங்கள் ஆனைவரும் எதிர்த்த நிலையில் என் மகனின் விருப்பமே எனக்கு முக்கியம் என்ற ஒரு வரியில் புறக்கணித்து "அப்பா ஐடி துறை சரி இல்லை" என்ற பொழுது தன் விருப்ப ஓய்வை எனக்காகஇரு வருடங்கள் தள்ளி வாய்த்த என் தந்தையின் உலகிலும் நன் செய்த அனைத்து தவறுகளையும் மறந்தும் மன்னித்தும் இன்றும் என்னை சிறுகுழந்தையாகவே பாவிக்கும் என் தாயின் உலகிலும் என்னை மட்டுமே நம்பி என்கை பிடித்து என் வாழ்கையின் துணையாய் நம்பிகையை வழிகாட்டியை தோழியாய் எனக்காகவே வாழும் என்மனைவின் உலகிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன் கம்பீரமாகவும் பெருமையாகவும்