Tuesday, May 25, 2010

விக்காத கடை

நம்ம யூத்து மழை பேஞ்ச அன்னிக்கு ரொம்ப ஸ்டைலா வந்தாரு. கும்முன்னு ஒரு சூ, கண்ணுல குளிர்கண்ணாடி, புதுசா கலரா ஒரு Tshirt , வலது கைல ஒரு குடை, இடது கைல ஒரு வாட்ச்னு ரொம்ப மணமணக்க வந்தாரு. என்ன தம்பி என்ன பண்ணிட்டு இருக்கனு கேட்டாரு. ஒன்னும் பண்ணல தல எப்பவும் போல வெட்டியா தான் இருக்கேன். என்னங்க சூ புதுசா? அப்டின்னு கேட்டேன். ஆமாம்பா USல வாங்கினது. குடை? அது சிங்கப்பூர். வாட்சு? அது துபாய். Tshirt? அது மலேசியா. அப்போ perfume? UKல வாங்குனேன்பா. அப்போ இந்தியால எதுவுமே வாங்கலையா? இந்தியாவுல எதுவுமே நல்லா இல்லப்பா அதுனால எப்பவுமே எல்லாமே பாரின்லதான் வாங்குவேன். இந்தியாவுல விக்கிற எதையும் வாங்க மாட்டேன்.

நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது அவரே மாட்டுனாரு. தம்பி இந்த சட்டை நல்லா இருக்கே எங்க வாங்குன? கடைல தான். அது இல்லப்பா எந்தக் கடைல வாங்குன? துணிக்கடைல தான். ஐயோ எந்த இடத்துல வாங்குன? துணியெல்லாம் இருக்கும்ல, துணிகூட விப்பாங்கள்ள அந்த இடத்துலதான். சரி உன்வழிக்கே வர்றேன், எந்த ஊருல வாங்குன? எங்க ஊர்ல வாங்குனேன். ஏன்டா படுத்துற? இல்லைங்க துணி வாங்குனா உடுத்துரேன், படுத்துறது இல்ல. சரி உங்க ஊரு பேரு என்ன? மதுரை. மதுரைல எந்தக் கடைல வாங்குன? மதுரைல துணிக்கடைல வாங்குனேன்.

சரி அத விடுப்பா, எனக்கு ஒரு பேண்ட் வாங்கணும், எங்க வாங்கலாம்? நான் சொன்னேன் "நேரா போங்க, லெப்ட்ல திரும்புங்க, அங்க மூணாவதா ஒரு டெய்லர் கடை இருக்கும் அங்க போய் பேண்ட் கேளுங்க". ஏய் டெய்லர் கடைல பேண்ட் விக்க மாட்டாங்கப்பா நீ அங்க போய் வாங்க சொல்ற?. நீங்க தான இந்தியாவுல விக்கிற எதையுமே வாங்க மாட்டீங்கல, அதான் விக்காத கடையா சொன்னேன். யூத்து எஸ்கேப்பு.

முக்கியமான விசயம்

இன்று நண்பர் சேரல் பிறந்தநாள் - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல.

No comments:

Post a Comment