Tuesday, May 18, 2010

ரொமான்ஸ்

கல்யாணம் ஆனதுக்கப்புறம், ஒரு ரெண்டு மூணு மாசம் கலுச்சு ரொமான்ஸ் எப்டி பண்றது?. ஒரு நாள் உங்க மனைவி எழுந்திரிக்கிறதுக்கு முன்னாடி எழுந்து சிங்க்ல இருக்குற பாத்திரத்த எல்லாம் கிளீனா வெளக்கிட்டு, வீடு முழுசும் நல்லா சுத்தமா கூட்டி விட்டு, பால எடுத்து சுண்ட காய்ச்சி ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு உங்க மனைவிய எழுப்பி "Good Morning Dear " னு காபிய நீட்டுங்க. உங்க மனைவி "என்னங்க நீங்க காபி போட்டுட்டு வந்துடீங்க" அப்டின்னு சொல்லிட்டு காபிய குடிப்பாங்க. குடுச்சதும் காபி நல்லா இருந்தா அதிகாலை முத்தம் கூட உங்களுக்கு கிடைக்கலாம், ஆனா அது நீங்க போடுற காபிய பொருத்தது. அப்புறமா அவங்க எழுந்து வந்து வீட்ட பார்த்ததும் அடுத்த அதிர்ச்சி என்னங்க வீடு கூட கூட்டிடீங்க?.சமையல் அறைக்கு போனதும் என்னாச்சு ஐயாவுக்கு பாத்திரம் கூட விளக்கிட்டீங்க?. ஒடனே நீங்க "எல்லாம் உனக்காகத்தான் இன்னிக்கு எனக்கு லீவ் தான அதான் நானே எல்லா வேலையையும் முடுச்சுட்டேன், என்ன இந்த பால் தான் பொங்கிருச்சு" அப்டின்னு சொல்லணும். ஒடனே எங்க மனைவி உங்கள இருக்கமா கட்டி பிடுச்சுகிட்டு "பரவா இல்லைங்க,தேங்ஸ்டா புருஷா, ஐ லவ் யு " அப்டின்னு சொல்லுவாங்க. அப்புறம் என்ன ஒரே ரொமான்ஸ்தான் போங்க.

இதையெல்லாம் கேட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா நெறைய ரொமான்ஸ் பண்ணலாம்னு நெனச்சா அவங்கள் பார்த்து நான் பரிதாப படுறேன். ஏன்னா அதுக்கப்புறம் தாண்டி மாப்புள்ள உனக்கு இருக்கு. "ஏங்க அதான் சமைச்சுட்டு இருக்கேன்ல, சும்மா டிவி பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம் போங்க போய் வீட்ட கூட்டுங்க, ஏங்க கொழந்தைய பார்த்துக்குவேனா இல்ல உங்களுக்கு காபி போடுவேனா, போங்க நீங்களா காபி போட்டுக்கோங்க, ஏங்க நான் கொழந்தைய தூங்க வைக்கணும் நீங்க அந்த பாத்திரம் எல்லாத்தையும் வெளக்கிட்டு வந்துடுங்க" இந்த மாதிரி நீங்க நெறைய பார்க்கணும். இந்த ரொமான்ஸ் உனக்கு தேவையா? அப்டின்னு வடிவேலு மாதிரி உங்கள நீங்களே அடுச்சுக்க வேண்டி வரும்.

சரி மறுபடி ரொமான்ஸ முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு அந்த மூணு வேலையும் காலைல உங்க மனைவிக்கு முன்னாடியே எழுந்து பண்ணா, அதுக்கப்புறம் தான் இருக்கு கச்சேரியே. "உங்கள யாரு இந்த வேலையெல்லாம் பண்ண சொன்னது? இப்ப பாருங்க பால இப்டி பொங்க விட்டு அடுப்பையே நாறடுச்சுட்டீங்க, ஏங்க உங்களுக்கு மண்டைல எதுவுமே கிடையாதா? உங்கள யாரு வீடு கூட்ட சொன்னது, நேத்து என்னோட கம்மல் ரெண்டையும் அந்த மூலைல கழட்டி வெச்சுருந்தேன், அதையும் சேர்த்து கூட்டீங்க, போங்க போய் குப்பை தொட்டில தேடுங்க, என்னது குப்பைய வெளில கொட்டிடீங்களா? அது எங்க சித்தப்பாவோட பொண்ணோட நாத்தனாரோட தங்கச்சியோட அண்ணியோட பொண்ணு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கன்னியாகுமரி போனப்ப வாங்கிட்டு வந்தது. ஏங்க உங்கள நான் பாத்திரம் வெளக்க சொன்னேனா? முழு சோப்பையும் கரச்சுட்டீங்க, நான் அத ஒரு வாரத்துக்கு வெச்சு தேச்சுருப்பேன். இப்டியா பாத்திரத்த கழுவுவாங்க, ஒரே சோப்பு எனக்கு எப்பவுமே ஒன்னுக்கு ரெண்டா இழுத்து விடுறதே உங்க வேலையா போச்சு. போங்க போய் உங்க வேலைய மட்டும் பாருங்க. போன்னு சொன்ன ஒடனே போய்டுவீங்களா, இந்த அடுப்ப கொஞ்சம் தொடைங்க". இப்ப சொல்லுங்க இந்த ரொமான்ஸ் உங்களுக்கு தேவையா? என்னது என்னோட ரொமான்ஸ் எப்டி இருக்கா.... அவ்வ்வ்வவ்வ்............

2 comments:

  1. ஆகா...அனுபவம் பலமா இருக்கும் போலிருக்கே தல...அசத்துங்க....நடக்கட்டும் நடக்கட்டும் :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete