"உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு "
இது வள்ளுவர் சொன்னது. நான் கொண்டிருத்த அந்த நட்பு வெகு சமீபத்தில் என்னை தனியே விட்டுச் சென்றது. ஒன்றல்ல இரண்டல்ல 17 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். என்னை அறியாமல் நீ எதையும் செய்ததில்லை, உனக்கு சொல்லாமல் நான் எதையும் செய்ததில்லை. இரட்டையர்கள் வருகிறார்கள் என்று ஊரே மெச்சியது. கடவுள் என்ற வார்த்தையை என் வாழ்வில் அகற்றிய நான் கோவிலுக்கு வந்தது உன்னை பார்க்க மட்டுமே. நீ இல்லை என்பதையே என் இதயம் ஏற்க மறுக்கிறது.மற்றவருக்கோ நீ ஒரு மனிதன் எனக்கு நீ என்பது நானே. இதோ இப்பொழுதும் என் தந்தை எதாவது கேட்டல் அவனிடம் கேளுங்கள் என்ற வார்த்தையே என்னுள் எழுகிறது. நீ இல்லாத இக்கணங்களில் திக்கு தெரியாமல் அலைகிறேன், தனிமரமாய் தவிக்கிறேன். நடந்தவைகளை சொல்ல மனம் இல்லை. என்னை பொறுத்தவரை என்னுள் இருக்கும் நீ என்னுடன் இல்லை. மிஸ் யு டா.
என்றென்றும் உன் நினைவுகளோடு
உன் நண்பன்
I understand.....
ReplyDelete@Pal
ReplyDeleteThanks Pal