Saturday, August 20, 2011

காத்தாடி

காற்றின் விசையில் கயிறு அறுந்து
விண்ணோக்கி பறக்கும் காத்தாடி போல
திக்குத்தெரியாமல் அலைபாயும் மனசு

சலனமின்றி வெக்கை புழுங்கும்
வேனிற்காலத்து கிணறு போன்று
வெறுமை ஆகியது வாழ்க்கை

சிதறிக்கிடக்கும் மௌனங்களை அள்ளியெடுத்து
கோர்க்கிறேன் மாலையாக
முடிச்சவிழ்க்கும் வித்தை தெரிந்த
உன்னிடம் விளையாடக் கொடுக்கிறேன்
ஒவ்வொரு மெளனமாக

No comments:

Post a Comment