Tuesday, June 29, 2010

ராவணன்


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ். அதே மாதிரிதான் ராவணன் படத்த பாக்குரவங்களுக்கும். சாமானியனுக்கு எடுக்குற படத்த பண்டிதர்கள் அப்டின்னு தங்களைத் தாங்களே சொல்லிக்கிற சில சின்ன பசங்க ராவணன் படம் நல்லா இல்ல, வசனமே புரியல, திரைக்கதை சரி இல்ல அப்புறம் ஏ.ஆர். ரஹ்மான் இசை சரி இல்ல அப்டின்னு சொல்லிக்கிட்டு திரிறாய்ங்க. அதாவது எல்லாரையும் சகட்டு மேனிக்கு திட்டனும் விமர்சனம் பண்ணனும் அப்புறம் குற்றம் சொல்லணும் அதுல பிரபலமாகனும், இத மட்டுமே தன்னோட வாழ்கையின் குறிக்கோளாய், லட்சியமாய் கொண்ட சாருநிவேதிதா ராவணன் படத்த ரொம்ப கொதறி இருக்காரு. இதெல்லாம் ஒரு பொழப்பா அப்டின்னு கேக்குரவங்ககிட்ட அது தான் அவரோட பொழப்பு அப்டின்னு தாழ்மையுடன் சொல்லிக்குறேன். வீரையா அப்டினா அது வீரப்பனாம், அவர இந்த படத்துல மணி நல்லவரா காமிச்சுட்டாரம். சாருவோட மகத்தான கண்டுபிடிப்பு இது. முடியல!!!!. இவர பெர்முடா முக்கோணம் அனுப்பனும். இவர பத்தி வினவுல ஒன்னு சொல்லிருந்தாங்க, அத படுச்சு சிரிச்சு சிரிச்சு வயறு வலி வந்துடுச்சு. ஒருத்தன் ஒரு பீர் வாங்கி குடுத்தா ஒடனே அவன தன்னோட சீடனா ஏத்துகிட்டு அவனோட புகழ் பாடுவாராம். ஜெயமோகன் ஆபீஸ்ல தூங்குறத பத்தி ப்ளாக்ல எழுதுறாருன்னு குத்தம் சொல்ற இவரு நாய் மேய்க்கிறத என்னவோ நாட்டைக் காப்பாத்துற மாதிரி சொல்றாரு அவரோட ப்ளாக்ல.

மக்களுக்கு இசை பிடுச்சுருக்கு, விக்ரம் & ஐஸ்வர்யா நடிப்பு பிடுச்சுருக்கு. படத்த எடுத்த விதம் பிடுச்சுருக்கு. ஒரு ரெண்டு மணிநேரம் தங்களை மறந்து சில விஷயங்கள ரசிக்கத்தான் மக்கள் படத்துக்கு போறாங்க. அவங்கள இந்த படம் கட்டாயம் ஏமாத்தாது. வீரையாவாவே விக்ரம் வாழ்துருக்காரு. அவருக்கும் ஐஸ்வர்யாக்கும் இடைல வரும் அந்த மெல்லிய உறவை எவ்ளோ கண்ணியமா காமிக்கணுமோ அவ்ளோ கண்ணியமா மணி காமிச்சிருக்காரு. படத்தோட ஹீரோக்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவாளர். ஏ.ஆர். ரஹ்மான் பேர போட்டதும் தியேட்டர்ல அப்டி ஒரு விசில் சத்தம். எப்பவும் மணி படத்துல எல்லாரையும் தாண்டி மணி ஹீரோவா தெரிவார். ஆனா இந்த படத்துல அவரையும் தாண்டி இவங்க தெரிறாங்க. ஆர்ட் டைரக்டர் அவரோட பணிய ரொம்ப சிறப்பா செஞ்சுருக்காரு. தன் தங்கச்சிய சிதச்சவங்கள கொன்னுட்டு அதுக்கு காரணமானவன அசிங்கப் படுத்துறாரு. தன் தங்கச்சிய நல்லா பாத்துக்குவான்னு நம்பி கல்யாணம் செஞ்சு குடுத்த மாப்பிளை அவளை கை விட்டுட்டு பயந்து ஓடினதும் அவனோட கைய வெட்டுறாரு வீரையா. இதெல்லாம் நடக்காத காரியம், இப்டியா பண்ணுவாங்கனு சொல்ற சின்ன பய மக்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். உங்கள யாரும் படம் பாக்க பாக்கு வெத்தல வெச்சு அழைக்கல. படத்துல எல்லாமே கரெக்டா இருக்கானு கேட்டா இல்லன்னு தான் சொல்லணும். நூறு சதம் இல்லனாலும் எண்பது சதம் சிறப்பாவே இருக்கு. இது விமர்சனம் இல்ல மக்களே என்னோட கருத்து. படம் பாக்குறதும் பாக்காததும் உங்க இஷ்டம். படம் பாக்குறதா இருந்தா தியேட்டர்ல பாருங்க குட் விசுவல் ட்ரீட்.

1 comment:

  1. நல்லா இருக்கு....படம் இன்னும் பாக்கல....பார்ப்போம்...

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete